Tuesday, April 26, 2011

சாய் பாபாவின் உடல்நிலை சீர்கெட காரணம்

      நன்றி: http://www.alagankulam.in/      

 

       சாய்பாபாவின் உடல்நிலை சீர்கெட காரணம் அவரது சீடர்களாம் – அறக்கட்டளை முன்னாள் பொருளாளர் குற்றச்சாட்டு

Indian-Guru-Sai-Baba-Still-Critical-In-Hospital
புட்டபர்த்தி:சாய்பாபா-தந்திரங்கள் புரிந்து மந்திரங்கள் என மக்களை ஏமாற்றி தன்னை கடவுளின் மனித அவதாரமாக சித்தரித்து வந்தவர். இன்று மருத்துவமனையில் படுத்த படுக்கையாக கிடக்கும் அளவுக்கு அவருடைய நிலைமை மோசமாகிவிட்டது.
தன்னைப் போன்றதொரு மனிதன் செய்யும் தகிடுதத்தங்களை புரிந்துக்கொள்ளும் ஆற்றலை இழந்துபோன சாய் பக்தர்கள் கோடிகளாக கொட்டி சாய்பாபாவை பணத்தால் மூழ்கடித்தனர். இன்று அவர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் கிடக்கும்பொழுது கூட பக்தர்களுக்கு அவர் மீதான பாசம் விட்டு அகலவில்லை போலும்.
கடவுள் அவதாரம் என கூறியவர் தனக்கு ஏற்பட்டுள்ள நோயைக் கூட குணப்படுத்த முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார் என்பதையும் பகுத்தறிவை தொலைத்துவிட்டவர்களால் புரிந்துக்கொள்ள இயலவில்லை. இப்பொழுது பக்தர்களை இன்னொரு முறை அதிர்ச்சியடையச் செய்யும் குற்றச்சாட்டு ஒன்றை ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் முன்னாள் பொருளாளரும், திருமலை திருப்பதி தேவஸ்தானம் முன்னாள் போர்டு தலைவருமான டி.கே.ஆதிகேசவலு நாயுடு தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் கிடக்கும் சாய்பாபாவின் தற்போதைய நிலைமைக்கு காரணம் அவரது சீடர்கள்தாம் என ஆதிகேசவலு சித்தூரில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் வைத்து   குற்றஞ்சாட்டினார்.
இதுக்குறித்து அவர் தெரிவித்ததாவது: “சாய்பாபாவுக்கு உணவு கூட வழங்காமல் அவருடைய நெருங்கிய உதவியாளர்கள் தயங்கியுள்ளனர். அவர் உடல் நிலை சீர்கெட்டு கீழே தடுமாறி விழுந்தபொழுது உரிய நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கவில்லை. அறக்கட்டளையில் நடக்கும் மோசடிகள் குறித்து சாய்பாபா கவலைக் கொண்டிருந்தார். நோயால் பாதிக்கப்பட்ட சாய்பாபாவை சிகிட்சை அளிப்பதற்கு பதிலாக அவரின் பாதுகாப்பு(?) பொறுப்பை ஏற்றுள்ள சத்யஜித், ஷியாம் சுந்தர் மற்றும் டாக்டர் அய்யர் ஆகியோருடன் கூடி ஆலோசித்து சாய்பாபாவுக்கு உடல்நிலை மேலும் சீர்கெடுவதை பார்த்துக் கொண்டிருந்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சாய்பாபாவுக்கு காலில் வெடிப்பு ஏற்பட்ட பொழுதும் முறையான சிகிட்சையை சத்யஜித் உள்ளிட்டவர்கள் வழங்க மறுத்துவிட்டனர். அன்று முதல் நல்ல உணவை சாய்பாபாவுக்கு வழங்க மறுத்த இவர்கள் வெறும் கஞ்சியை மட்டுமே உணவாக அளித்து வந்தனர்.
இதர நபர்கள் சாய்பாபாவை காண்பதைக்கூட இவர்கள் தடுத்துவிட்டனர். சாய்பாபாவுக்கு தெரியாமல்(?) அவரது உதவியாளர்கள் தூக்க மாத்திரைகளை அளித்து வந்தனர். உலகின் பல பகுதிகளிலிருந்தும் சாய்பாபாவை காணவந்த அவரது சீடர்கள் ஒரு தடவை அவரை பார்க்க இயலாமல் நிராசையுடன் திரும்பினர். இதுப்பற்றி வினவிய பொழுது சத்யஜித்தும் அவரைச் சார்ந்தவர்களும் பதிலளிக்க தயாராகவில்லை. நான் கொஞ்ச காலமாக சத்யசாயி அறக்கட்டளையில் பொருளாளராக பதவி வகித்தேன். அங்கு நடக்கும் முறைகேடுகள் குறித்து ஐ.பி.எஸ் அதிகாரியான ஹெச்.ஜெ.தோரா, ரமன்ஜானேயுலு, பரமஹம்ஸா ஆகியோருடன் கேள்வி எழுப்பியிருந்தேன்.” இவ்வாறு ஆதிகேசவலு நாயுடு கூறினார்.
நாயுடுவின் குற்றச்சாட்டுக் குறித்து பதிலளித்துள்ள சத்ய சாய் அறக்கட்டளை, விரைவில் சாய்பாபா குணமடைவார் எனவும், 15 தினங்களுக்குள் தனது வசிப்பிடம் திரும்புவார் எனவும் தெரிவித்துள்ளது.
தனக்கு ஏற்பட்ட நோயை குணப்படுத்த முடியாமல் மருத்துவமனையை நாடியவர், தனக்கு தூக்க மாத்திரையை அளித்ததை அறிந்துக்கொள்ள இயலாதவர், தனது பாதுகாப்பிற்கு ஆட்களை நியமித்தவர் என ஏராளமான பலகீனங்களுக்கும், பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளுக்கும் சொந்தக்காரரான சாய்பாபாவை இன்னமும் அவரது பக்தர்கள் நம்பிக் கொண்டிருப்பதுதான் வெட்க கேடாகும்.

சாய் பாபாவின் உடல்நிலை சீர்கெட காரணம் அவரது சீடர்களாம் – அறக்கட்டளை முன்னாள் பொருளாளர் குற்றச்சாட்டு 17 Apr 2011 புட்டபர்த்தி:சாய்பாபா-தந்திரங்கள் புரிந்து மந்திரங்கள் என மக்களை ஏமாற்றி தன்னை கடவுளின் மனித அவதாரமாக சித்தரித்து வந்தவர். இன்று மருத்துவமனையில் படுத்த படுக்கையாக கிடக்கும் அளவுக்கு அவருடைய நிலைமை மோசமாகிவிட்டது. தன்னைப் போன்றதொரு மனிதன் செய்யும் தகிடுதத்தங்களை புரிந்துக்கொள்ளும் ஆற்றலை இழந்துபோன சாய் பக்தர்கள் கோடிகளாக கொட்டி சாய்பாபாவை பணத்தால் மூழ்கடித்தனர். இன்று அவர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் கிடக்கும்பொழுது கூட பக்தர்களுக்கு அவர் மீதான பாசம் விட்டு அகலவில்லை போலும். கடவுள் அவதாரம் என கூறியவர் தனக்கு ஏற்பட்டுள்ள நோயைக் கூட குணப்படுத்த முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார் என்பதையும் பகுத்தறிவை தொலைத்துவிட்டவர்களால் புரிந்துக்கொள்ள இயலவில்லை. இப்பொழுது பக்தர்களை இன்னொரு முறை அதிர்ச்சியடையச் செய்யும் குற்றச்சாட்டு ஒன்றை ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் முன்னாள் பொருளாளரும், திருமலை திருப்பதி தேவஸ்தானம் முன்னாள் போர்டு தலைவருமான டி.கே.ஆதிகேசவலு நாயுடு தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் கிடக்கும் சாய்பாபாவின் தற்போதைய நிலைமைக்கு காரணம் அவரது சீடர்கள்தாம் என ஆதிகேசவலு சித்தூரில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் வைத்து   குற்றஞ்சாட்டினார். இதுக்குறித்து அவர் தெரிவித்ததாவது: “சாய்பாபாவுக்கு உணவு கூட வழங்காமல் அவருடைய நெருங்கிய உதவியாளர்கள் தயங்கியுள்ளனர். அவர் உடல் நிலை சீர்கெட்டு கீழே தடுமாறி விழுந்தபொழுது உரிய நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கவில்லை. அறக்கட்டளையில் நடக்கும் மோசடிகள் குறித்து சாய்பாபா கவலைக் கொண்டிருந்தார். நோயால் பாதிக்கப்பட்ட சாய்பாபாவை சிகிட்சை அளிப்பதற்கு பதிலாக அவரின் பாதுகாப்பு(?) பொறுப்பை ஏற்றுள்ள சத்யஜித், ஷியாம் சுந்தர் மற்றும் டாக்டர் அய்யர் ஆகியோருடன் கூடி ஆலோசித்து சாய்பாபாவுக்கு உடல்நிலை மேலும் சீர்கெடுவதை பார்த்துக் கொண்டிருந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சாய்பாபாவுக்கு காலில் வெடிப்பு ஏற்பட்ட பொழுதும் முறையான சிகிட்சையை சத்யஜித் உள்ளிட்டவர்கள் வழங்க மறுத்துவிட்டனர். அன்று முதல் நல்ல உணவை சாய்பாபாவுக்கு வழங்க மறுத்த இவர்கள் வெறும் கஞ்சியை மட்டுமே உணவாக அளித்து வந்தனர். இதர நபர்கள் சாய்பாபாவை காண்பதைக்கூட இவர்கள் தடுத்துவிட்டனர். சாய்பாபாவுக்கு தெரியாமல்(?) அவரது உதவியாளர்கள் தூக்க மாத்திரைகளை அளித்து வந்தனர். உலகின் பல பகுதிகளிலிருந்தும் சாய்பாபாவை காணவந்த அவரது சீடர்கள் ஒரு தடவை அவரை பார்க்க இயலாமல் நிராசையுடன் திரும்பினர். இதுப்பற்றி வினவிய பொழுது சத்யஜித்தும் அவரைச் சார்ந்தவர்களும் பதிலளிக்க தயாராகவில்லை. நான் கொஞ்ச காலமாக சத்யசாயி அறக்கட்டளையில் பொருளாளராக பதவி வகித்தேன். அங்கு நடக்கும் முறைகேடுகள் குறித்து ஐ.பி.எஸ் அதிகாரியான ஹெச்.ஜெ.தோரா, ரமன்ஜானேயுலு, பரமஹம்ஸா ஆகியோருடன் கேள்வி எழுப்பியிருந்தேன்.” இவ்வாறு ஆதிகேசவலு நாயுடு கூறினார். நாயுடுவின் குற்றச்சாட்டுக் குறித்து பதிலளித்துள்ள சத்ய சாய் அறக்கட்டளை, விரைவில் சாய்பாபா குணமடைவார் எனவும், 15 தினங்களுக்குள் தனது வசிப்பிடம் திரும்புவார் எனவும் தெரிவித்துள்ளது. தனக்கு ஏற்பட்ட நோயை குணப்படுத்த முடியாமல் மருத்துவமனையை நாடியவர், தனக்கு தூக்க மாத்திரையை அளித்ததை அறிந்துக்கொள்ள இயலாதவர், தனது பாதுகாப்பிற்கு ஆட்களை நியமித்தவர் என ஏராளமான பலகீனங்களுக்கும், பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளுக்கும் சொந்தக்காரரான சாய்பாபாவை இன்னமும் அவரது பக்தர்கள் நம்பிக் கொண்டிருப்பதுதான் வெட்க கேடாகும்.

No comments: